காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வு

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல்  முஜாகீதின் பயங்கரவாத இயக்க தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு கடும் வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளும் முழு அடைப்பு மற்றும் வன்முறையை தூண்டி விட்டதால் பாதுகாப்பு படையினர் இடையே போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அங்கு தற்போது நிலமை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை இன்னும் நீடிக்கிறது.  

பதட்டமான பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிப்பெய்டு மொபைல் போன்களில் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு இருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இருப்பினும், செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும், 99 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியே உள்ளது.  காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித் மசூதி 14 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...