காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வு

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல்  முஜாகீதின் பயங்கரவாத இயக்க தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு கடும் வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளும் முழு அடைப்பு மற்றும் வன்முறையை தூண்டி விட்டதால் பாதுகாப்பு படையினர் இடையே போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அங்கு தற்போது நிலமை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை இன்னும் நீடிக்கிறது.  

பதட்டமான பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிப்பெய்டு மொபைல் போன்களில் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு இருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இருப்பினும், செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும், 99 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியே உள்ளது.  காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித் மசூதி 14 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...