பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தகர்க்க முயன்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

லாகூர்: பாகிஸ்தானில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு நிறுவனத்தை தகர்க்க பதுங்கியிருந்த அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முல்தான் மாவட்டம். இங்குள்ள சுஜாபாத் பகுதியில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு அமைப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான சிலர் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலில் இறந்தவர்கள் தடை செய்யப்பட்ட அல்கொய்தா மற்றும் தெஹ்ரி இ தலிபான் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...