ராணுவம் பேசாது; வீரத்தை காட்டும்: பிரதமர் மோடி புகழாரம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போர் நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘ராணுவம் பேசாது; வீரத்தை செயலில் காட்டும்’ என்று புகழ்ந்து பேசியதுடன், ‘தேசம், எல்லைகளை கடந்த பல மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவ வீரர்கள்’ என பாராட்டினார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடம் 41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டு எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. அதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி, தனது பேச்சை தொடங்கினார். அவர், பேசியதாவது: நமது ராணுவம் எப்போதும் பேசுவதில்லை. தனது வீரத்தை செயலில் தான் காட்டுகிறது. அதைத்தான் நமது பாதுகாப்பு அமைச்சரும் செய்கிறார். நாம், ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் போது, அவர்களின் சீருடை, வீரத்தை பற்றிதான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அதையும் தாண்டி, மனிதநேயத்தின் உதாரணமாக அவர்களை நாம் பார்க்க வேண்டும்.

ஐநா அமைதிப்படையில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது ராணுவம், எல்லை, தேசத்தை தாண்டி பல மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. ஏமன் உள்நாட்டு போரில், பொதுமக்களை மீட்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றியது. அப்போது இந்தியர்களை மட்டுமின்றி சில பாகிஸ்தான் மக்களைக் கூட நமது ராணுவம் காப்பாற்றி வந்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ராணுவம் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றியது. காஷ்மீரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நமது ராணுவத்தினர், அங்குள்ள சில மக்கள் நம் மீது கல்வீசியவர்களாயிற்றே என ஒருபோதும் நினைக்காமல் பலரை காப்பாற்றி உள்ளனர். இப்படி, எல்லையை காப்பது மட்டுமின்றி பேரிடர் சமயத்திலும் அவர்கள் நம் உயிரை காப்பாற்றியுள்ளனர் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டத்தில், முந்தைய அரசுகள் பொய்யான பல வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக இந்த அரசு பெருமை கொள்கிறது.

எல்லையில் உயிரை பணயம் வைத்து, இரவு பகலாக அவர்கள் பாதுகாப்பதால் தான் நம்மால் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது. சில நாடுகளில் ராணுவ வீரர்களை விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ பார்க்கும் போது, மக்கள் எழுந்து நின்று, கைதட்டி அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர். அதை நாமும் கடைபிடிப்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...