இந்து முன்னணி பிரமுகர் கொலை: சந்தேக நபரின் படத்தை வெளியிட்ட சிபிசிஐடி

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் உட்பட சிபிசிஐடி குற்றப்புலனாய்வுத் துறை காவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், சசிகுமாரின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை பார்த்ததாக ஒருவர் கூறியதையடுத்து, அவரது உதவியுடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரின் புகைப்படம் வரையப்பட்டு தற்போது அதை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். 

அந்தப் படத்தில் காணப்படும் நபர் கோவை டி.ஆர்.சாலையில் அமைந்திருக்கும் பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவை தானாகவே முன்வந்து அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அந்த புகைப்படத்திற்கு தொடர்புடைய நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதனை சிபிசிஐடி-க்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை சென்னை, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் அவர்களுக்கு 94981 04441 என்ற எண்ணிலோ அல்லது[email protected] என்ற இணையதள முகவரியுலும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...