காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்- வித்யாசாகர் ராவ்

தஞ்சை: காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தம்மால் இயன்றதை செய்வேன் என்று தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் உறுதி அளித்துள்ளார். மும்பையிலுள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு, தமிழ் பேரரசர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அர்பணித்ததற்காக, தஞ்சையில் தமிழக ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவுக்கு சென்னை தமிழ்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் காவேரி டெல்டா விவசாயிகளின் பிரச்சனை குறித்து தாம் நன்கு அறிவேன். காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் 30 நிமிடம் உரை நிகழ்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

விழாவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தமிழ் பல்கலைகழ துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...