பெட்ரோல் நிலையங்கள் விற்பனை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு


விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தக் கோரி, பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முரளி கடலூரில் வியாழக்கிழமை கூறியது:

இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் அதன் முகவர்களுக்கு விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்கவில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, வருகிற 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதையடுத்து, நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிலிருந்து தொடர் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து, மாதத்தில் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருள்களின் விற்பனை நிறுத்தப்படும். நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். விற்பனை நிலையங்களில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனங்களின் சின்னங்களில் உள்ள விளக்குகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் அணைக்கப்படும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களில் விற்பனை நிறுத்தப்படும். தமிழகம், புதுவையில் 4,500 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...