ஆற்றுநீரை உறிஞ்சும் மது ஆலை- வறட்சியில் விவசாயம்.



கோவை மாவட்டம், மாவூத்தம்பதியில் தனியார் மது ஆலை நிர்வாகம் ஆற்றில் இருந்து நீர் எடுபதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவூத்தம்பதி கிராமம், அத்திகண்டிவயல் பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வாழை, மஞ்சள், வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதேபகுதியில் இம்பீரல் ஸ்பிரிட் அண்ட் வயின் என்ற தனியார் மது ஆலையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அத்திகண்டிவயல் ஓரம் அமைந்துள்ள வாளையாறு ஆற்றையொட்டி உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமார் 751 மீட்டர்  தூரம் குழாய் பதித்து சுமார் 300 கியூபிக் மீட்டர் நீர் எடுக்க அந்த மது ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குழாய் பதிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்திய விவசாயிகள் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நிலத்தடி நீரின்றி கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இதற்கு, 2013 ஆம் ஆண்டு அந்த தனியார் மது ஆலைக்கு வாளையாற்றில் இருந்து நீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆற்றின் ஓரேத்தில் இருந்து சுமார் 3 லட்சம் லிட்டர் நீர் எடுக்கலாம் எனவும் அந்த ஆலை நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 2.5 இஞ்சி பைப் மூலம் மட்டுமே நீர் எடுக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், மது ஆலை நிர்வாகம் 8 இஞ்சி பைப்பிணை பொறுத்தி அதிகப்படியான நீரை எடுத்து வருகிறது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் வன விலங்குகள் பயண்படுத்தும் நீரை தனியார் மது ஆலை நிர்வாகம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறுகட்டப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்  தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகளின் நலன் கருதி தனியார் ஆலை நீரை எடுக்க வழங்கிய அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...