மான் குறுக்கே வந்ததில் வாகன ஓட்டி பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கோத்தகிரிக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான் சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் வாகனத்தை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட கோத்தகிரி காவல்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (இன்று) பாஸ்கரன் உயிரிழந்தார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...