துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மியான்மரில் மோதல்; 12 பேர் சாவு

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பியாங்பிட் என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களும், துப்பாக்கிகளையும், வாள்களையும் ஏந்தி வந்த கலகக்காரர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர், கலகக்காரர் ஒருவர் என 5 பேர் பலியாகினர்.

இதற்கிடையே டாங் பாயிங் நயார் என்ற இடத்திலும், கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 7 பேர் உயிரிழந்தனர். இறந்து போனவர்களின் உடல்கள் அருகே வாள்களும், தடிகளும் கிடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோதல்களை தொடர்ந்து அந்தப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...