உயிரை காக்கும் புதிய முயற்சியில் போக்குவரத்து போலீசார்

தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருந்த போதும் பலர் அதை கடைபிடிப்பதில்லை. வாகனத்  தணிக்கையின் போது ரூ.100-ஐ மட்டும் அபராதமாக கட்டிவிட்டு  ஹாயாக பறக்கின்றனர் இரு சக்கர வாகன ஓட்டிகள். 
இந்த நிலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கோவை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறை இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன்  கூறியதாவது :- 
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை கணக்கீடு செய்ததில், ஹெல்மெட் அணியாதவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதை தடுக்க புதிய முயற்சியை மேற்கொண்டோம்.  முதலில், வருங்கால வாகன ஓட்டிகளான குழந்தைகளுக்கு  போக்குவரத்து விதி முறைகளை கற்றுத்தர முடிவு செய்தோம். அதன்படி, வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத் தருகிறோம். இது வரை 6 பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. 

போஸ்ட் கார்டு 
நாங்கள் எடுக்கும் வகுப்பில் மாணவர்களிடம் 'உங்கள் நண்பர் அல்லது பெற்றோரை ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியும் படி கூறுங்கள், அவ்வாறு உங்கள் பேச்சை கேட்டு அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தால் அதை எங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துங்கள்'  என்று கூறி, எங்கள் அலுவலக முகவரி அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகளை  பள்ளி மாணவர்களிடம் கொடுத்தோம்.  400 போஸ்ட் கார்டுகள் கொடுக்கப்பட்டதில் 150 கார்டுகளை மாணவர்கள் எங்களுக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர். அதில் பெற்றோர் தங்களது பேச்சை கேட்பதாகவும் , தற்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. கடிதம் எழுதிய மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் ஒரு சிறிய பரிசு அளித்து வருகிறோம். 100 சதவிகித பாதுகாப்பான பயணமே எங்கள் நோக்கம். அதை விரைவில் சாத்தியப்படுத்துவோம். 
இவ்வாறு அவர் கூறினார்.  





Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...