மேத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி: ஒபாமா அறிவிப்பு

புளோரிடா: 'மேத்யூ' புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கவிருக்கிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

"மேத்யூ' புயல்:

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய "மேத்யூ' புயல் லத்தீன் அமெரிக்க நாடான ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இப்புயலுக்கு இதுவரை 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் மேத்யூ புயல், அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை நேரத்தில் புளோரிடாவை தாக்க உள்ளது. இனையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எமர்ஜென்சி அறிவிப்பு:

இந்நிலையில் மேத்யூ புயல் காரணமாக, புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். புளோரிடாவை தொடர்ந்து மேத்யூ புயல் தென் மற்றும் வட கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...