நாளை மறுநாள் முதல் சென்னை உயர் நீதிமன்றம் விடுமுறை

தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை கால நீதிமன்றம் 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை செயல்படும். விடுமுறை கால நீதிபதிகளாக நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர்.
அதேபோல், நீதிபதிகள் டாக்டர்எ ஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.  

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...