சீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை முயற்சி தொடக்கம்

பீஜிங்: இந்திய தொலைத்தொடர்புத்துறை 4ஜி எனப்படும் அதிவிரைவு சேவையை தற்போது வழங்கிவரும் நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. அதற்கான முதற்கட்ட சோதனையில் சீனா இறங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் உள்ள சுமார் 130 கோடி மக்கள் கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் 4ஜி சேவை இணைப்புகளை பெற்றுள்ளனர். வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் செயலாற்றும் இந்த 4ஜி இணைப்பைவிட அதிகவேகம் கொண்டது இந்த 5ஜி சேவை இது வினாடிக்கு 20 ஜபி வரை அதிவேகமாக இயங்கக்கூடியதுமான 5ஜி இணைப்பை தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

கைபேசி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவலைப்பெற விரும்பும்போது தற்போது 4ஜி இணைப்பின் மூலமாக பெற 10 மில்லிவினாடி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இதே தகவலை 5ஜி இணைப்பின் வழியாக ஒரே மில்லிவினாடியில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உள்ள 100 முக்கிய பெருநகரங்களில் இந்த 5ஜி சேவையை தொடங்குவதற்கான சிக்னல் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் சோதனைரீதியான முதல்கட்ட முயற்சியில் சீனா தற்போது களமிறங்கி உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...