ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் காலை அறிவியல் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் மகுடபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளின் அணிவகுப்பினை ஏற்று மரியாதையை செய்தார். பின்னர், ஒலிம்பி  திபத்தினை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்:
இன்றைய காலத்தில் பெண்கள் உடல்நலம் பேணுதல் மிக அவசியமான ஒன்று. பெண்கள் இல்லத்திலும், பணியிடத்தில் பல்வேறு பணிகளை  ஆற்றுகின்றனர். அவர்கள் பிறர் துணையின்றி செயல்பட, உடல்நலம் பேணுதல் மிகவும் அவசியம் என்றார். 


ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதர்வர் சித்திரா பேசுகையில்: 
பெண்கள் வாழ்வில் உண்மை, விடாமுயற்சி, வலிமை, ஆளுமைத் தன்மை போன்ற பண்புகளை தக்க வைத்துக்கொண்டால், வெற்றியை நிலைநாட்ட முடியும் என்றார். 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மகேஸ்வரி அணைத்து விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். அனைத்து போட்டிகளிலும் சிறந்த விளையாட்டு அணியாக இண்டிகோ அணி வெற்றிவாகை சூடியது. அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை பட்டத்தினை இண்டிகோ அணியின் வீராங்கனை ஜனனி பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை நீலநிற அணியின் ஜெய ஸ்ரீ பெற்றுக் கொண்டார்.


இறுதியில் மாணவர் மன்றத் துணை செயலர் ஐஸ்வர்யா நன்றியுரை கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...