கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி!

கோவையில் வோடபோன் நிறுவனம், புற்றுநோய் விழிப்புணர்வை குறித்த மாரத்தான் போட்டியை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.



 வோடபோன் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள்  நடத்தி வருகிறது. நேற்று, காலை 5 மணியளில் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் துவங்கப்பட்டது. இதில் ஆண்கள் , பெண்கள் என  சுமார் 12 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க அனுபவமிக்க மூத்த குடிமக்கள், குழந்தைகள் என ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதில்,  முதல் பிரிவாக 21 கி.மீட்டரும், இரண்டாம் பிரவில் 10 கி.மீ., மூன்றாம் பிரிவாக 5 கி.மீ., என அமைந்திருந்தது. 21 கி.மீ., போட்டியின்  ‘ ரூட் மேப் ’, நேரு ஸ்டேடியத்தில்  துவங்கி பார்க் கேட் வழியாக, ஹிந்தி அலுவலகம், எல்.ஐ.சி சந்திப்பு, ஹீசூர் சாலை, ரெட்கிராஸ் பில்டிங், கே.ஜி., திரையரங்கம், ரேஸ்கோர்ஸ் பிக்பஜார் வழியாக சுங்கம், காமராஜ் சாலை, என இறுதியில் ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்தை அடைந்தது.


  
இது போன்று 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., போட்டிகளுக்கும் ரூட் மேப் அமைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியில் இறுதியில் வெற்றி பெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

























Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...