மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை


ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி வெளியிடப்பட்டது.

புற்றுநோய்மையத்தின்இயக்குனரும், தலைமைமருத்துவருமானமருத்துவர்குகன்இந்தகருவியைபற்றிக்கூறுகையில்:

ஆண்டு தோறும் பிங்க் மாதம் என்று அழைக்கப்படும் அக்டோபர் மாதத்தில் உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்று நோய் சிகிச்சை மையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதுவரை மக்களிடையே 12000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக, மார்பகம் பற்றிய விழிப்புணர்வு கையேடு, இலவச மேமோகிராம், குறும்படம் வெளியிடுதல்,  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



தற்போது, இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் இன்று ஒரு புதிய சாதனையாக மார்பக புற்று நோய் பற்றிய பொதுமக்கள் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி, ஒரு பிங்க் நிறமான 8 ஜி.பி திறன் கொண்ட சிலிக்கான் யு.எஸ்.பி கைப்பட்டை ஆகும்.இது வளையல் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மார்பக புற்று நோய்  பற்றிய அதிவேகமான தெளிய இணையதள இணைப்பு, கைபேசி, அலைபேசியில், எளிதாக கொண்டு சேர்க்கக்கூடிய மொபைல் அப்பிளிக்கேஷன் இணைப்பு, பார்க்க புற்று நோய் பற்றிய வீடியோ, ஆரம்ப நிலையில் மார்பக கட்டிகளை பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய்களை கண்டறிதல் முக்கியத்துவம் வலியுறுத்தும் குறும்படம், இணையவழி புத்தகம் என்னும் மார்பக புற்று நோய்  பற்றிய தாவல் திரட்டு. 

இந்த கைப்பட்டையை இலவசமாக மகளிர் சுயஉதவிக்குழு, மகளிர் மன்றங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், கிராமப்புற மகளிர் மன்றங்கள், மகளிர் கல்லூரி ஆகிய அமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதோடு, வழக்கம்போல் இம்மாதம் இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் மேமோகிராம் போன்ற பரிசோதனை நடக்கும். புற்று நோயை முறியடிப்போம் என்றார். 

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...