இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பினால் 400 சுற்றுலாப் பயணிகள் அவசர வெளியேற்றம்

இந்தோனேசியாவில் சுற்றுலாத் தலமான பருஜானி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 400 பயணிகள் புதன்கிழமை அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பருஜானி எரிமலை செவ்வாய்க்கிழமை வெடித்து புகை கக்கத் தொடங்கியது. அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய புகை இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பரவியது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அந்தப் பகுதியில் சுமார் 400 சுற்றுலாப் பயணிகள் இருந்தது பதிவேடுகள் மூலம் தெரிந்தது. அதையடுத்து மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்கு புதன்கிழமை விரைந்து சுற்றுலாப் பயணிகளை மீட்டனர்.எரிமலை வெடித்த பகுதிக்கு 3 கி.மீ. சுற்றுப் பரப்புக்குள் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...