தனிமைப்பட்டது பாகிஸ்தான் - சார்க் மாநாடு ரத்து!


டெல்லி: பாகிஸ்தானில் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா உள்பட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 19வது சார்க் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதில் சார்க் நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திலுள்ள யூரி தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. 

இதனையடுத்து, 4 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணித்ததால் சார்க் மாநாடு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைப்படி, சார்க் மாநாடு நடைபெற வேண்டுமானால் அனைத்து உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்பது கட்டாயம். இந்தியாவின் பின்னால் பல நாடுகளும் அணி வகுத்து நிற்பது, பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியின் முதல் வெற்றி.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...