7 கோடி மோசடி! செருப்பால் அடித்த மக்கள்!


கோவையில் 7 கோடிக்குமேல் மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு.

திருச்சியைச்சேர்ந்த சின்னசாமி கணபதி பகுதியில் மெட்குயுர் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்தார், திருச்சியை சேர்ந்த பெல் நிறுவனதில் ஒப்பந்த செய்துள்ளதாகவும், அதற்கு பொது மக்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் ஊக்கத்தொகையுடன் ஒரு லட்சத்தி பத்தாயிரமாக வழங்கப்படும் என ஆசை வர்த்தை கூறியதை நம்பி கோவையில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செலுத்திய தொகை குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்ட போது, பெல் நிறுவனத்துடன் எந்த ஒரு ஓப்பந்தமும் செய்யவில்லை , மகிழ்ச்சியாக வாழ பணம் தேவைப்பட்டதால்தான் உங்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர் .புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சின்னச்சாமி இன்று விசாரணைக்காக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்துள்ளார். விசாரணை முடிந்த பின்பு வெளியே வந்த சின்னச்சாமியை சூழ்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் செருப்பால் அவரை தாக்கியதால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சின்னசாமியை பத்திரமாக அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது இந்த மோசடியில் சின்னச்சாமியின் குடும்பம் முழுவதும் ஈடுபட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் திருச்சியில் வீடு, நிலம்,200 பவுன் நகைகள் மற்றும் கார்கள் அதிக அளவில் வாங்கியிருப்பதாகவும்,அதை மீட்டு தங்களது முதலீட்டு பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையினரிடம் முறையீட்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...