ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனம் மோசடி

பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ (OLA) கால் டாக்ஸி நிறுவனத்தில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வரை கடனாளி ஆகிவிட்டதாக குற்றம்சாட்டி கோவையில் 50க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனமான ஒ.எல்.எ கால் டாக்ஸி நிறுவனம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்துடன் இணைந்து காரை வாடகைக்கு இயக்கப்பட்டால் அதிகளவிலான லாபம் பெற்று தரப்படும் என விளம்பரம் செய்ததன் அடிப்படையில் ஏராளமானோர் அந்நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஒட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒ.எல்.எ கிளை நிறுவனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தொழில் நடத்தி வருகின்றனர். 


ஆரம்பத்தில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டு அதில் 15 சதவிகிதம் ஒ.எல்.எ நிறுவனத்திற்கும் 85 சதவிகிதம் காரின் உரிமையாளருக்கும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 28 சதவிகிதம் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என அந்நிறுவனம் வற்புறுத்துவதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தர மறுத்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட காரின் மீட்டரை அந்நிறுவனம் இன்று முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டி 50க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த 8 மாதமாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை ஒ.எல்.எ நிறுவனம் வழங்க வில்லை எனவும், அந்நிறுவனத்தில் இணைந்து காரை இயக்கினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என விளம்பரத்தை நம்பி தற்போது ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். தாங்கள் வாங்கிய காருக்கு மாத தவணை கட்டமுடியாமலும், ஒட்டுனருக்கு ஊதியமும் வழங்க முடியவில்லை என குற்றம்சாட்டிய உரிமையாளர்கள், தங்களுக்கு உரிய விளக்கம் நிர்வாகம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...