சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கூட்டு பண்ணை திட்டத்திற்கான குழு அமைக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான 2017-18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணைய திட்டத்திற்கான குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.

2017- 18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணையம் செயல்படுத்திட தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டு பண்ணையம் திட்டத்தில், 20 நபர் கொண்ட, சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். ஐந்து விவசாய ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு விவசாய உற்பத்திக்குழு ஆரம்பிக்கப்படும்.

வணிக வசதியுடன் கூடிய இக்கூட்டு பண்ணைய முறையில், ஒருங்கிணைந்த பரப்பில் ஒரே பயிரினை உற்பத்தி செய்து, நீடித்த லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலப்பு பண்ணையம், மதிப்பு கூட்டிய வேளாண்பொருட்கள் உற்பத்தி செய்தல் மற்றும் குழுவினரே தொழில் முனைவோராக தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் அடங்கிய உற்பத்திகுழுக்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும், உயரிய வேளாண்மைத்துறை தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலை பெருக்கவும், அரசுத்துறை அலுவலர்கள் உதவுவர்.

உற்பத்தி குழுக்கள் துவங்கும் போது, ஒரு குழுவுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் இருப்பு நிதி (கார்பஸ் நிதி) மூன்று கட்டமாக பரித்து வழங்கப்படும். குழுக்கள், கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 130 விவசாய ஆர்வலர் குழுக்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2600 விவசாயிகள் கூட்டு பண்ணையம் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டட உள்ளனர். தலா 5 ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைந்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இருப்பு நிதியாக மொத்தம் ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்துறையுடன் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகவும். இத்திட்டம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களின் ஆலோசனைப்பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...