நீலகிரியில் உள்ள நீர்மின் நிலையங்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், பைக்காரா மற்றும் சிங்காரா நீர்மின் நிலையங்களை இன்று (ஜூலை 3) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு (2016-2018) தலைவர் எஸ்.முத்தையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி பைக்காரா மற்றும் சிங்காரா நீர் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழத் தலைவர் எஸ்.முத்தையா, அதன் செயல்முறைகளை கேட்டறிந்தார்.



பைக்காரா இறுதி நீர்மின் நிலையம் 150 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்டது. இதற்கு நீராதாரம் கிளன்மார்கன் அணையிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பானது 154.23 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் இயக்க உரம் 1039 மீ. இந்நீர்மின் நிலையம் துவக்கப்பட்டு ஆண்டு 2005. ஒரு வருடத்திற்கு சராசரியாக 265.94 மில்லியன் யூனிட் கிடைக்கப்பெறுகிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 584 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிங்காரா நீர்மின் நிலையத்தை ஆய்வு செய்து பார்வையிட்ட எஸ்.முத்தையா அதன் செயல்முறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...