சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகள் உபயோகிப்பது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு குறைவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக உள்ள பைகளை பயன்படுத்துவது குறித்த கலந்தாலோசனை மற்றும் உபவிதிகள் உருவாக்குவதற்கான கூட்டம் கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் குப்பைகள் 100 சதவிகிதம் தரம் பிரித்து கையாள்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சண்முகம், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (பொ) கே.சரவணக்குமார், உதவி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், உணவக சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...