பட்டாசு கடைக்கான உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு


தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

பட்டாசுக்கடைக்கான உரிமம் பெற கடந்த ஜீலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். 

இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விருப்பமுடையவர்கள் மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால், பட்டாசுக்கடை அமைப்பதர்கான உரிமம் பெற வரும் 11-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக  போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது :- 

வரும் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலக்கப்பட்டு, காவல்துறையின் ஆய்வுக்கு பிறகே உரிமம் வழங்கப்படும். 

வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி, சாலையோரங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...