கருமத்தம்பட்டியில் இரட்டைக் கொலை செய்தவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த வாய்க்கால்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (63), இவரது மனைவி சுந்தராம்மாள் (58). இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், குமாரசாமி, சுந்தராம்மாள் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் விசைத்தறி நடத்தி வசித்துவந்தனர்.



இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குமாரசாமி மற்றும் அவரது மனைவி உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், நேற்று காலை குமாரசாமியை தேடி அவரது உறவினர்கள் பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது குமாரசாமியும், சுந்தராம்மாளும் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குமாரசாமிக்கு சொந்தமான விசைத்தறியில் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

தொடர்ந்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குமாரசாமி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இதை பார்த்த சுந்தரம்மாளையும் படுகொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, இந்த இரட்டைக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி பெருமாள் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிவரை பெருமாளை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பெருமாள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...