லக்ஷ்மி மெஷின் வொர்க்கர்ஸ் நிறுவனம் சார்பில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி

லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டிஜே நினைவு புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. 



இப்போட்டியானது, லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி.ஜெயவர்த்தனவெலு நினைவாக 2012 முதல் கொண்டாடப்படுகிறது. 



அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். 



கடந்த ஜூன் 30ம் தேதியன்று www.djmpc.in என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் டிஜேஎம்பிசி 2017-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பாலன் மாதவன், ஆபூர்பா குமார் தாஸ் மற்றும் தியோடர்பாஸ்கரன், கே. மருதாசலம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தக் கண்காட்சி கோவை கஸ்தூரி ஸ்ரீநிவாசன் கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.



விலங்குகள் மற்றும் காடு சார்ந்த தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 1484 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் இருந்து 6674 பதிவுகள் பெறப்பட்டது. 

இந்த புகைப்படப் போட்டியில் விலங்குகள் புகைப்படப் பிரிவில் சச்சின் ராய் முதல் பரிசும், நிதின் ஜெயின் இரண்டாம் பரிசும் வென்றனர். தொடர்ந்து, நிலப்பரப்பு புகைப்படப் பிரிவில் திவாஸ் ஜி ஹெட்ஜ் முதல் பரிசும், தேப்ராஜ் சக்ரபர்த்தி இரண்டாம் பரிசும் வென்றனர். முதல் பரிசிற்கு தலா ரூ.2.5 லட்சம் ரூபாயியும், இரண்டாம் பரிசிற்கு ரூ.1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...