அண்ணா பல்கலைகழகத்தில் "கலாம் வனம்" முதாலம் ஆண்டு நிறைவு விழா

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் வகையில், அண்ணா பல்கலைகழக மண்டல வளாகத்தில் சிறுதுளி அமைப்புடன் இணைந்து "கலாம் வனம்" திட்டம் முதல் கட்டமாக 27.07.2016 அன்று 5,000 மரக்கன்றுகள் நட்டுத் துவக்கி வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டமாக 16.10.2016 அன்று 4,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மூன்றாம் கட்டமாக 11.01.2017 அன்று 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. நான்காம் கட்டமாக 15.03.2017 அன்று 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சுமார் 500 பழங்கள் மற்றும் அரிதான தாவரங்கள் நடப்பட்டன. 7.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சேகரிப்பு குளம் நிறுவப்பட்டது.



டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, மேலும் 7,000 மரக்கன்றுகள் 27.07.2017 வியாழக்கிழமை இன்று காலை 9:00 மணியளவில் நடப்பட்டது. இதில் ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.ஷா, அண்ணா பல்கலைக் கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மூத்த பத்திரிக்கையாளர் சுசீ திருஞானம், ரேடியோ சிட்டி பிரபு, கோவை மண்டல வளாக முதன்மையர் சரவணக்குமார், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...