இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று துவக்கம்

கோவை பி.ஆர்.எஸ் பயிற்சி மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்போர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜீன் 21 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 15 மையங்களில் நடைபெறுகிறது.  இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் பயிற்சி மைதானத்தில் உடல் தகுதி தேர்வு இன்று துவங்கியது. 

இந்த உடல் தகுதி தேர்வு வருகின்ற 30 ம் தேதி வரையும், பெண்களுக்கான தேர்வு 31 ம் தேதியும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் நாள்தோறும் ஆயிரம் பேர் விதம் 3 ஆயிரத்து 875 பேர் பங்கேற்கின்றனர். இதில் உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, ஓட்டப்பந்தயம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...