கே.எம்.சி.எச் மருத்துவமனையில் "கர்ப்பப்பை புற்றுநோய் பற்றிய தொடர் மருத்துவ கல்வி"

மாத விடாய் காலத்தில் அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படுவதை பெண்களும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர்களும் எதிர் கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னைகளாகும். மாத விடாயின் போது அதிகமான ரத்தம் வெளியேறுவதற்கு ஹார்மோன்  கோளாறுகள் போல பல காரணங்கள் உண்டு மேலோட்டமாக காணும் போது, இதனால் எந்த பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உண்டு. கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் போல சாதாரணமானவையாக இல்லாத போதும் கருவறை புற்றுநோய் இந்திய பெண்களிடையே மெல்ல அதிகரித்து வருகிறது. சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய, இது போன்ற நோய்களை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்து, மகளிர் நோயியல் மருத்துவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். 

கர்ப்பப்பை புற்றுநோய்  பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு என்னென்ன சிகிச்சை முறை விருப்பங்கள் உள்ளன என்பதை கற்றுக்கொள்ளவும் மற்றும் கலந்துரையாடவும் கே.எம்.சி.எச் மருத்துவமனை ஜூலை 25 தேதியன்று மகளிர் நோயியல் மருத்துவர்களுக்காக ஒரு தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை நடத்தியது. "கர்ப்பப்பை புற்றுநோய் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை" கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில், விருப்பத்திற்கேற்ப சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு வழங்குவதிலும் மற்றும் மருத்துவர்களை மேலும் கற்றுக்கொள்ள தூண்டுவதற்கு, கலந்து பேசுவதற்கும் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களை தெரிந்து கொள்ளவும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் கே.எம்.சி.எச் மருத்துவமனை முன்னணியில் உள்ளது. அறிவு பூர்வமான பரிமாறுதல்களை ஒத்த கருத்துடைய மருத்துவர்கள் பகிர்ந்துகொள்ளவும் பொதுமக்களிடையே மாத விடாய் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு மேடை அமைத்து கொடுப்பதிலும் கே.எம்.சி.எச் மருத்துவமனை  பெருமிதம் கொள்கிறது என்று கூறினார்.

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணராக உள்ள டாக்டர். அன்புக்கனி சுப்பையன் கூறுகையில், மாத விடாய் காலங்களில் பெண்களுக்கு அசாதாரணமான ரத்தப்போக்கு ஏற்படுகிறதா, என்பதை மகளிர் நோய் மருத்துவர்கள் ஒரு சந்தேக அளவுகோலோடு  கண்டறிய வேண்டியது, தேவை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு ஏற்படும், அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இந்த தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி கூறும் செய்தியாகும். கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயை நிர்வகிப்பதில் தற்போது உள்ள நடைமுறைகள் பற்றியும் மற்றும் இவ்வகையான நோய்களை கையாளும் புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் நன்றாக விளக்கி கூறினார்.



இந்நிகழ்ச்சியில், பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஜனீஷ் குமார் குப்தா, உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான மகளிர் நோய் மருத்துவர்களும் பங்கு கொண்டனர். பேருரைகள், விவாதங்கள் மூலமாக மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சை விருப்பங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. கோவை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் சுமார் 125க்கும் மேற்பட்ட மகளிர் நோயியல் மருத்துவர்கள், பயிற்சி பெறுவோர் மற்றும் முதுகலை பயிலும் மருத்துவ மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...