கழுத்து அறுபட்ட நிலையில் பெண் பிணம்- போலீசார் தீவிர விசாரணை



உதகை பகுதியை சேர்ந்த ரேவதி (45) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுக்கரை அருகே, அரிசிபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தோட்டம் பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ரேவதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முதற்கட்டமாக ரேவதியின் மகன் என்று கூறி சந்தோஷ் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் ரேவதியின் தலையில் கணமான பொருள் கொண்டு தாக்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிந்துள்ள கைரேகைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேவதியின் கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...