ஜிஎஸ்டி வரி விதிப்பால் பிசியோதெரபி மருத்துவ கட்டணம் உயர வாய்ப்பு !


ஜிஎஸ்டி வரி விதிப்பால் பிசியோதெரபி மருத்துவக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது என கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 80 சதவிகித மருத்துவ சேவையை தனியார் மருத்துவமனைகளே வழங்கிவருகின்றன. இதனால் மருத்துவ சேவைக்கான வரியில் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. ஆனால் மருத்துவ சேவைகளை வழங்க தேவையான மருத்துவ உபகரணங்களின் வரி உயர்வானது மறைமுகமாக மருத்துவ கட்டணங்கள் உயர அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மருத்துவ சேவை முழுமையாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக இந்தியர்களை அதிகம் பாதிக்கின்ற சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுக்கான டையலைஸிஸ் சிகிச்சைக்கான உபகரணங்களுக்கான வரிவிதிப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மற்றும் இருதய கோளாறுக்கான பேஸ் மேக்கர் உபகரணத்திற்கான வரிவிதிப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கண் கோளாறை கண்டறியும் உபகரணங்களுக்கான வரி விதிப்பு 9 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் உயர்ந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பயன்படும் அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் எலும்பை இணைக்கும் தகடுகள், செயற்கை மூட்டு போன்ற மருத்துவ உபகரணங்களின் வரி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவைகள் அனைத்தும் இன்றியமையாத மருத்துவ சேவைகளின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பாக அமைவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், பிசியோதெரபி மருத்துவ சேவைகளுக்கான சேவை வரியில் விலக்கு அளிக்கபட்டாலும் பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களின் பெரும்பாலானவை வரிவிதிப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சில சிகிச்சை உபகரணங்கள் 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் உடற்பயிற்சி சிகிச்சை உபகரணங்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உடல் ஊனமுற்ற நோயாளிகளுக்கு வழங்க கூடிய வீல் சேர் வரி 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனால் பிசியோதெரபி மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. மற்ற மருத்துவ துறையை விட பிசியோதெரபி துறை சார்ந்த உபகரணங்களுக்கான வரிவிதிப்பு அதிகம். அதுமட்டுமல்லாது புதியதாக தொடங்கபடவுள்ள பிசியோதெரபி மருத்துவமனைக்கான முதலீட்டை இந்த வரி விதிப்பு அதிகரித்துள்ளது. கட்டிட கட்டுமான பொருட்களின் வரி உயர்வு, பர்னிச்சர் பொருட்களின் வரி உயர்வு, மருத்துவ உபகரணங்களின் வரி ஆகியவற்றால் பிசியோதெரபி மருத்துவ துறைக்கான மூதலீடு அதிகரித்துள்ளது.

இதனால் பிசியோதெரபி மருத்துவமனைகள் உருவாகுவது குறைய வாய்ப்பு உள்ளது. இது வளர்ந்து வரும் பிசியோதெரபி மருத்துவ துறையின் வளர்ச்சியை பெருமளவில் பாதிக்கிறது. மற்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்தியாவில் வந்து சிகிச்சை எடுக்க நடைமுறைகள் தளர்த்தபட்டுள்ளது மற்றும் வரி விலக்கு போன்றவை வரவேக்கத்தக்கவையாக இருந்தாலும் இந்திய மக்களுக்கு தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைத்திட மருத்துவ சேவை வரி மட்டுமல்லாது மருத்துவ உபகரணங்களுக்கான சரக்கு வரிகளை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...