அதிமுகவினர் நடத்தும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாறுவதாக -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் என அதிமுகவினர் நடத்தி வரும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறித்தினார். ஒரு மொழியை விரும்பி படிப்பதை தடுப்பது எப்படி தவறோ அதைப் போலவே ஒரு மொழியை மற்ற மாநில மக்களின் மீது திணிப்பதும் தவறு எனக்கூறிய அவர் கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்க பிரதமர் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறித்தினார். ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க தங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தவர். நடிகர் கமலஹாசனின் கருத்துக்களை ஊழலுக்கு எதிரான கருத்துக்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆனால், கமலின் கருத்துக்களுக்கு பதில் கருத்து சொல்லி பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப தமிழக அமைச்சர்கள் முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முன்பே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய தீர்வை குடியரசு தலைவர் மூலமாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் மெட்ரோ இரயில் திட்டம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...