கோவையில் துவங்கியது 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா

கொடிசியா நடத்தும் 3-ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துடன் (பபாசி) இணைந்து, கொடிசியா கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்நிலையில், 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாத்தில் துவங்கியது. இதனை அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 



இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், புது தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 170 பதிப்பாளர்கள், 265 அரங்குகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இதில், தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் நேரமாக உள்ளது.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்தேவ்பாய் சர்மா பேசுகையில், ''புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய, இதுபோன்ற கண்காட்சிகள், பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார். கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது,'' என்றார்.



பின்னர், கோவை புத்தக கண்காட்சி சார்பில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, படைப்பாளருக்கான "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. இறுதியில் கொடிசியா துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.



Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...