பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி விலகியது அதிமுக ஒன்றுசேர்வதை காட்டுகிறது -மக்களவை துணை சபாநாயகர் பேச்சு



கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி நேற்று ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது அதிமுக ஆட்சியையும் பாதுகாக்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினர் ஒன்றுசேர்வதை காட்டுவதாக அக்கட்சியின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியையும் பாதுகாக்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினர் ஒன்றுசேர்வதை காட்டுகிறது என பதிலளித்தார். மேலும் ஆறுக்குட்டி அந்த அணியில் விலகியதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது எனவும் கூறிய அவர், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது தேவையற்றது எனவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று வந்தாலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, ஊழல் என்பதை நிருபிக்க வேண்டுமெனவும், ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது எனவும் பதிலளித்தார். மேலும் நாடு முன்னேற பொது வாழ்க்கைக்கு நடிகர் கமலஹாசன் வருவதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணைக்குழு விசாரணையில் உண்மை வெளிவரும் என பதிலளித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....