நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்பப்படும்- துணை சபாநாயர் தம்பி துரை



நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் எனவும், தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பி துரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், சசிகலா, தினகரன் ஆகியோர் லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் தொடர்ச்சியாக வருவது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சிகள் லஞ்சப்புகார்கள் தெரிவித்து அரசியல் செய்கின்றன எனவும் இதை அரசியல் ரீதியாக அதிமுக  எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் நீட் பிரச்சனைக்கு காரணம் திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே. தற்போது அந்த இரு கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது. 

தமிழகத்திற்கு தேவையான பொறியியல், மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் எடுத்துச் செல்ல முயல்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தமிழகம் முனிசிபாலிட்டியாக மாறக கூடாது. மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன.

நீட் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று விட்டதால் மத்திய அரசை அதிமுக-வால் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் குரல் எழுப்பப்படும். தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும். 

அதிமுக-வில் ஓரே அணிதான் இருக்கிறது. பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் கமல் அரசியலுக்கு வந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆட்சியில் தவறுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும். அதிமுக மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறது, மற்ற கட்சிகளுக்கு பயப்படாது". இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...