கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதில் 20 ரூபாய் நோட்டு வழங்கிய ஏடிஎம்


கோவையில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் 2000ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை செளரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை காளிதாஸ் தனது மருத்துவ செலவுக்காக சவுரிபாளையம் பகுதியில் இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்றார்.

50 ஆயிரம் ரூபாயை 5 தவணைகளாக எடுக்க முயற்சித்த அவர் 10ஆயிரம் ரூபாயாக எடுத்தார். ஒவ்வொரு முறையும் நான்கு 2000ம் ரூபாய் நோட்டுகளும் ஒரு 20 ரூபாய் நோட்டும் வந்தது.



இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் மனமுடைந்த அவர் மருத்துவ செலவுக்கு அவசரமாக தேவைப்படும் பணம் கிடைக்க தாமதமானதற்கு வங்கி அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வங்கி ஏடிஎம்-ல் 2000-ம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்தது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...