நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் கொள்ளை


நடிகர் தலைவாசல் விஜய்க்கு சொந்தமாக கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (27). ‘லிப்ட்’ தயாரித்து நடத்தி வரும் இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தனது நிறுவனத்திற்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேலும், அலமாரியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 சவரன் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடித்து சென்றனர்.

நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிய போது இக்கொள்ளை சம்பவம் நடந்தது ராஜேந்திரனுக்கு தெரிவந்துள்ளது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு  செய்தனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 2 கைரேகைகள் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...