'கும்' இருட்டில் சிக்கித்தவிக்கும் பந்தைய சாலை சிறுவர் பூங்கா : நடவடிக்கையை எதிர்நோக்கும் குழந்தைகள்

கோவை மாநகரில் சூழல் பிரச்சனைகளே இல்லாத ஒரு ரம்யமான இடம் ரேஸ்கோர்ஸ். அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கியப்புள்ளிகள் வாழும் பகுதி இது. இப்பகுதியில் அமைந்துள்ள மண்டல நீதித்துறை பயிலகம் அருகே சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது.



ஊஞ்சல், சறுக்கி விளையாட்டு, சீ-சா போன்ற குழந்தைகளின் விருப்ப விளையாட்டுகள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அருகில் இருக்கும் அரசு குடியிருப்பு மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், சிறுவர்கள் மாலை நேரத்தில் இந்த பூங்காவில் பொழுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.

கும் இருட்டு

பொதுவாக மாலை நேரத்தில் குழந்தைகள் அதிக அளவில் இந்த பூங்காவிற்கு வருகின்றனர். இந்த சூழலில் பூங்காவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மின்விளக்கு எரியாமல் இருள் படர்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் பூங்காவிற்குள் ஒரு நபர் இருந்தால் கூட அது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத அளவிற்கு கும் இருட்டு.



இருந்த போதும், பெற்றோர்களுடன் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் அங்கு விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இவ்வாறு, இருள் படர்ந்த பூங்கா குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.

மேலும், மதிய வேளையில் பூங்கா-விற்குள் யாரும் நுழையக்கூடாது என்பதற்காக பூங்காவை சுற்றிலும் வேலியமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த வேலியும் பழுதடைந்துள்ளது.

கோவையின் மத்திய பகுதியில், அதுவும் அரசு அதிகாரிகளின் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் இது போன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...