கோவை மதுக்கரை அருகே உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றிதிரிந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


கோவை மதுக்கரையொட்டிய பகுதியில் தொடர்ச்சியாக யானையின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மதுக்கரை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் தள்ளாடிய நிலையில் சுற்றிய சிறுத்தையை கண்ட பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்கானித்த கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே சிறுத்தை மயங்கி விழுந்தது.



இதனை அடுத்து, வனத்துறையினர் தண்ணீரில் நனைத்த துணியை கொண்டு சிறுத்தையை சுற்றி வனத்துறையினரின் வாகனம் மூலம் மதுக்கரை அடுத்துள்ள இந்திய கடற்படை வீரார்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.வனத்துறை மருத்துவர்களின் சிகிச்சைக்காக காத்திருந்த நிலையிலேயே சிறுத்தை உயிர் இழந்தது. 

நகரத்தையொட்டிய பகுதியான மதுக்கரையில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளதும் அது மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அங்கு சென்று வனப்பாதுகாவலர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர் மனோகரன் சிறுத்தை இறந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...