வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென்கைலாய பக்தி இயக்கம்

தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் "தென்கைலாய பக்தி இயக்கம்" பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.



அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தை தொடர்ச்சியாக இவ்வாண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்களும் இயற்கை இரசிகர்களும் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். ஒருபுறத்தில் தனிமனிதருக்கு இந்த பயணம் ஒரு மிகப்பெரிய அனுபவத்தை ஏற்படுத்தினாலும் ஏராளாமான மக்கள் இங்கு வந்து செல்வதால் இந்த இடம் பிளாஸ்டிக் குப்பைகளால் மாசுபடுகிறது. இது இங்குள்ள வன உயிர்களுக்கும் மண் வளத்திற்கும் பாதிப்பாக அமைகிறது.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென்கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை தங்கள் செயல் திட்டத்தில் ஒருமுக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்கைலாய பக்தி இயக்கம் சார்பில் வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணி கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தி வருகிறது. ஜூன் 25 ம் தேதியன்று நடைபெற்ற சுத்திகரிப்பு பணியில் சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், பெங்களூர், ஹைதெராபாத், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், கேஜி கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேருரை சேர்ந்த சிவபக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் அடிவார கோவில் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணி மேற்கொண்டனர்.



அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சுத்திகரிப்பு பணியில் சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது. நான்று ஞாயிற்றுக்கிழமைகள் நடந்த இந்த சுத்திகரிப்பு பணி மூலம் சுமார் 1200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...