குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் எடுக்கும் முடிவிற்கு நானும் ஆதரவு - எம்.எல்.ஏ. கருணாஸ்

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என அதிமுக நிர்வாகிகள் எடுத்த முடிவிற்கு தோழமை கட்சியான நானும் உடன்படுகிறேன் என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா  நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 

'எனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும்,  அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் தான். குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என அதிமுக நிர்வாகிகள் எடுத்தமுடிவிற்கு தோழமை கட்சியான நானும் உடன்படுகிறேன். 

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் பெற்று பாஜக-விற்கு ஆதரவு அளிக்கப்பட்டதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு அப்படி தான் மூத்த நிர்வாகி தம்பிதுரையும், துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்தனர்' என கருணாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதிமுகவில் நடக்கும் உள்கட்சி பிரச்சனைகள் குறித்து பேச எனக்கு உரிமையில்லை. 

ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தவறில்லை. அரசியல் வியாபாரம்  அல்ல, மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் யாரும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு பிடித்தால் அவர்களை ஆதரிப்பார்கள். 

நீட் தேர்வு விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசு எந்த விதத்திகும் தமிழர்களின் சுயமரியாதையையும், உரிமைகளையும் விட்டுத்தராது. அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டுமென்பது மக்கள் விரோத கருத்து. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் திட்டங்களை அறிவித்தது போல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் 110 விதியின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நல்லாட்சி நடத்தி வருகிறார். 

4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தொடரும். எதிர்கட்சி என்பது ஆளுங்கட்சி மீது குறை கூறுவது இயற்கையானது தான். அதிமுக ஆட்சி குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள்' என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ்குமார், சக்திவேல், திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...