காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு பாஜக ஆதரவு கோரி வருகிறது.

வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பாஜக தலைவர்கள் ஆதரவு கோரினார்கள். மேலும் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்றும் பாஜக-வினர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...