கோவை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவம் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யபிரியா (19). இவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் மற்றும் தலை சுற்றல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சத்யபிரியா-வை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது இருதயத்தில் சிறிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



முதன் முறையாக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள புதிய அறுவைசிகிச்சை இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. 25 நிமிடம் இருதய துடிப்பை நிறுத்தி மேற்கொள்ளும் இந்த சிகிச்சை மிகவும் நுணுக்கமானது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது 2 முதல் 3 லட்சம் வரை பணம் செலவாகும். எனவே, இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இனி பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...