ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை. 2 பேர் காவல் நிலையத்தில் சரண்

கோவை செல்வபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:  

கோவை சுங்கம் சிவராம் நகரைச் சேர்ந்த கோபாலின் மகன் வினோத்குமார் (36), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், செல்வபுரம் ஐயூடிபி காலனியை அடுத்த தேவேந்திர காலனியில்  உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்குமாரை வெட்டியுள்ளனர். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குண்டுராஜன் என்கிற ராஜன் (38), செல்வராஜ் (37) ஆகியோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும், கள்ளக்காதல் தொடர்பாகவே இந்தக் கொலை நடந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...