கோவை வெள்ளலூர் பகுதியில் நுழைந்த யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது- முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டம்

கோவை மாவட்டம், மதுக்கரை, வெள்ளலூர் பகுதியில் நான்கு பேரைக் கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். கும்கி யானை மூலம் இந்த ஒற்றை யானை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனிடையே, நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் நுழைந்த அந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) தாக்கியது. இதில் சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கியது. தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்த யானை தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் உள்ளிட்டு ஏராளமான வனத்துறையினர் முகாமிட்டனர். மேலும, இந்த காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் மற்றும், மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் உள்ளிட்ட மூவரும் சுமார் 12.30 மணியளவில் யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்தி பிடித்தனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை முகாமுக்குக் கொண்டு செல்ல வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிதளவு மயக்கம் தெளிந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...