தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் வாட்ஸ்அப் எண் அறிமுகம்


கோவை மாநகராட்சியில் தென்மேற்கு பருவமழை வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள  ஐந்து மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட இடங்களை தவிர, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் உடனுக்குடன் அகற்றிவிடவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் - 8190000200 மற்றும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையம் எண் - 0422 2302323 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...