கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்ததை அடுத்து லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

கோவை சித்தாபுதூர்- நவ இந்தியா இடையே தனலட்சுமி நகர் என்ற பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுமார் 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதுக்கடை வராது என அபோலீசார் உறுதியளித்தால் மட்டுமே கலைவதாக கூறி  பொதுமக்கள் சாலையில் அமர்ந்த படுத்தும் போராட்டத்தை தொடர்ந்தனர் .இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததையடுத்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் பொதுமக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...