இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக நீதி கேட்டு கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதி கேட்டு கோவையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சசி குமார் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை முக்கிய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்யவில்லை.

எனவே, சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் அதிமுக இரு அணிகளும் மோதிக்கொண்டு இருப்பதாகவும், அதனால் சட்ட ஒழுங்கு சீராக இல்லை எனவும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பரணியம் குற்றம்சாட்டினார். மேலும், தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ-க்கு சசிகுமார் கொலை வழக்கை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்து முன்னணியினரால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...