கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார்

கோவையில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பாதியிலேயே சென்றதால், விவசாயிகள், அதிகாரிகளுடன் காரச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், முடிவு எடுக்க வேண்டிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படுவதில் மெத்தனம் காட்டுவதாக உள்ளது.



மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும்.

கோவையில் தென்னை, வாழை, காய்கறி உள்ளிட்டவை சாகுபடி அதிகளவு இருந்தும் அவற்றிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படாதது காப்பீடு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் உள்ளது. வறட்சி நிவாரணம் வழங்கப்படும் விவசாயிகள் பட்டியலை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட வேண்டும். கணினியில் பட்டா பூமி தொடர்பாக தவறான தகவலை வேண்டுமென்று பதிவேற்றம் செய்யும் அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோவை மாவட்ட விவசாயிகள் சார்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...