கல்வி நிறுவனங்கள் அருகே செயல்படும் கடைகளில் போதை பொருள் குறித்து ஆய்வு செய்யப்படும்- சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி


உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு வாரம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

உலக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட சுகாதார துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து போதை பொருள் தடுப்பது குறித்தும், போதை பொருட்களுக்கு மக்கள் அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும் கோவை அரசு கலை கல்லூரி அருகே விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் தங்களது பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பானுமதி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போதை பொருட்களை முற்றிலும் தடுக்க அவற்றை விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளுக்கு நேரில் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அபராதங்கள் விதித்து வருவதாக தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் வழிகாட்டுதல்படி வாரம் முழுவதும் கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் கோவை பிபிஜி கல்வி நிறுவனங்கள் சார்பில் புகையிலை எதிர்ப்பு பேரணி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்த இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு புகையிலை மற்றும் புற்றுநோய் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...